We are a Building Strong Roots
Through Tamil Learning.
Nurturing Tamil Language, Culture, and Community
செம்மொழி தமிழ்ப் பள்ளியின் வளையதள பக்கத்திற்கு வருகைதந்தமைக்கு எங்கள் முதல் வணக்கம் .
நமது தாயக மண்ணை விட்டு, தமிழ் இனம் இன்று உலகம் முழுதும் படர்ந்து வாழும் சூழலில் , எங்கே நம் சந்ததியோடு உலகின் தலைச்சிறந்த , முதன்மை மொழியான தமிழ் மொழியும் மறைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏங்காத தமிழர் யாரும் இல்லை என்றே கூறலாம் .
அடுத்த தலைமுறைக்கு நம் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு செல்லும் பொறுப்பு , ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும் .
“ தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் உள்ளது “ என்ற கூற்றிற்கு இணங்க மான்செஸ்டர் வாழ் தமிழர்களாகிய நாங்கள் , இங்கு வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர உறுதி பூண்டோம் .
2016 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அதற்கான களப்பணியை துவங்கி பெற்றோருடன் , கலந்தாலோசித்து , பின் 06/01/2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை எங்கள் முதல் வகுப்பை துவங்கினோம்.
முதல் ஆறு மாதங்கள் எங்களிடையே இருந்த வளங்களை வைத்தே பாடம் பயிற்றுவித்தோம் . பிறகு உலகத்தமிழ் கல்விக்கழகத்தோடு கூட்டு சேர்ந்து உரிய சந்தாவை செலுத்தி அவர்ககளின் பாட திட்டத்தை தற்போது பயில்விக்கின்றோம் .
நாற்பத்தியைந்து குழந்தைகளுடன் தொடங்கிய பள்ளி தற்போது எழுபத்தியெட்டு மாணவச்செல்வங்களை கொண்டுள்ளது . இது ஒரு கூட்டு முயற்சி. செம்மொழி தமிழ் பள்ளி சிறப்பாக செயல் பட உறுதுணையாக இருக்கும் அத்துணை தன்னார்வலர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி .
“தமிழ் விதைப்போம் தமிழ் வளர்ப்போம் “ என்பதே எங்கள் பள்ளியின் குறிக்கோள் . தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே தமிழ் அன்னைக்கு நாங்கள் செய்யும் சமர்ப்பணமாகும்.
வாழிய நற்றமிழ்
வாழிய பாரதம்
ஓங்குக ஒற்றுமை
செழிக்கட்டும் சமத்துவம்.
இங்கனம் ,
“விதை ஒரு நாள் விருட்சமாகும் “என்ற நம்பிக்கையுடன் வழி நடத்தும் செம்மொழி தமிழ்ப் பள்ளி அறங்காவலர்கள் .
Our
Objectives
To promote Tamil as a language among the children in our community,who are of either Tamil origin or otherwise
To conduct Tamil language classes for children who are interested in learning the language and help them to read,write and speak in Tamil.
By promoting Tamil language in our local community, we preserve the culture and heritage of Tamil speaking people.
To promote Tamil as a language among the children in our community,who are of either Tamil origin or otherwise